செவ்வாய், 15 மார்ச், 2011

எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம் ! ( பகுதி - 2 )


சில சந்தேகங்கள் : 2
பகுதி - 1 ஒரு மர்ம கதைபோல இருக்கிறதா நண்பர்களே.. சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு உலகில் நடக்கிற நிகழ்வுகளெல்லாம் மர்மமாகவே இருக்கின்றன என்பது தான் உண்மை. இது போன்ற பல சந்தேகங்களை எழுப்பும் போது நம்மை ஒரு பைத்தியக்காரன் போல் தான் பார்க்கிறார்கள். அதைப்பற்றி கவலை இல்லை. நமக்குள் எழும் பல சந்தேகங்களை ஆதாரங்களோடு இங்கே எழுதுகிறேன்.
2004 - இல் ஏற்பட்ட சுனாமியைப் பற்றி ஆஸ்ட்ரேலியா மற்றும் ரஷ்யா நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அது இயற்கையாய் ஏற்பட்டது அல்ல என்றும் சுமித்திரா தீவில் அமெரிக்காவால் கடலுக்கடியில் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பே ( Underwater Nuclear Blast ) என்றும் சொல்கிறார்கள். வெடிக்கப்பட்ட அந்த அணுகுண்டின் சக்தி என்பது அமெரிக்காவால் ஹீரோஷீமா - நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுபோல் 32,000 மடங்கு சக்தி வாய்ந்தது என்கிற விவரத்தையும் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்னொரு பயங்கரத்தையும் சொல்லியிருக்கிறார்கள். 2004 - லில் நடத்தப்பட்ட Underwater Nuclear Blast என்பது சென்னைக்கு அருகில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டது என்கிற மிகப்பெரிய பயங்கரத்தையும் சொல்லி இருகிறார்கள். இப்போது ஜப்பானில் நிகழ்ந்திருக்கும் சுனாமியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
சாதாரணமாக இந்தியாவில் ஒரிசா கடலோரங்களிலும், ஜப்பான் நாட்டு கடலோரங்களிலும் சுனாமி என்பது நம் பகுதிகளில் வரும் புயல் - வெள்ளம் போல் ஒரு இயற்கை சீற்றம் தான். மக்களை பொறுத்தவரையும் அது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த சுனாமி என்பது நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் போதே நமக்கு ஒரு மாதிரியான திகில் உண்டாகிறது. கோபத்தோடும், ஆக்ரோஷத்தொடும் கடல் நீர் பொங்கி எழுந்து ஊருக்குள் ஆர்பரித்து வருவதைப் பார்த்தால் அது இயற்கையாய் வருவது போல் தெரியவில்லை. அதில் தான் நமக்கு சந்தேகம் வருகிறது.
உறவாடி கெடுக்கும் குணம் என்பது அமெரிக்காவிற்கு இயற்கையாகவே கூடப்பிறந்தது. ஒரு 500 ஆண்டுகாலம் கூட வரலாறு இல்லாத அமெரிக்கா அண்டை நாடுகளை அழித்தே சுகம் கண்டது. தனக்கு அடங்கி நடக்காத நாடுகளின் மீது போர் செய்து அந்த நாட்டை சின்னாபின்னமாக்கி நாசப்படுத்துவது அதன் இயற்கையான செயல். அதேப்போன்று தன்னை விட
முன்னேறும் நாடுகளை பார்த்து அதனால் பொறுத்துக்கொள்ளவும் முடியாது.
அந்த நாட்டோடு நட்பாய் பழகி நெருங்கி உறவாடி அந்த நாட்டை சூழ்ச்சியாலேயே அழித்துவிடும் என்பது தான் நாம் இதுவரை பார்த்துவந்த உண்மை. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று சொல்லுவார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனால் அமெரிக்க புகுந்த நாடு உருப்படாது.
இந்தியாவில் அமெரிக்காவிற்கு விசுவாசம் காட்டக்கூடியவர்களே ஆட்சி செய்கிறார்கள். மக்கள் எதிர்த்தாலும் அமெரிக்காவோடு நெருக்கம் காட்டுகிறார்கள். அமெரிக்கா சொல்லும் மக்கள் விரோத தேசவிரோத செயல்களை செய்கின்ற அரசாங்கம் தான் இங்கே இருக்கின்றது. இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை... ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், கட்டுமானங்களையும், அமைதியையும் குலைக்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் மீது போர் செய்யும்.. அல்லது புதியப் புதிய நோய்களை பரப்பிவிடும்.. அல்லது சுனாமி போன்று இயற்கையை நமக்கு எதிராக தூண்டிவிடும். இது தான் அமெரிக்காவின் இயற்கையான குணாம்சம்.
அதனால் தான் 2004 - அந்த சுனாமி நடத்தப்பட்டது. வெறும் சுனாமி மட்டும் உண்டாக்கி நாசப்படுத்தினால் போதுமா... அதில் போடப்பட்ட மூலதனத்திற்கு லாபம் வேண்டாமா.. அது தான் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை
அமெரிக்க முதலாளிகளுக்கு எழுதி கொடுக்கும் வேலையை மன்மோகன் அரசு எஜமான விசுவாசத்தோடு செய்து வருகிறது...! அங்கு அவர்கள் ஓட்டல்களை கட்டிக்கொள்வார்கள். சூப்பர் மார்கெட் வைத்துக்கொள்வார்கள். விமானதளத்தோடு டவுன்ஷிப்பை உருவாக்குவார்கள். இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ஆபத்தும் காத்திருக்கிறது. அது என்னவென்றால் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகளை இங்கே தொடங்குவார்கள். இப்போது புரிகிறதா.. தனக்கு லாபம் கிடைக்கும் என்றால் எதையும் செய்யத் துணியும் ஏகாதிபத்தியம்... ( இன்னும் வரும் )

கருத்துகள் இல்லை: