சனி, 19 மார்ச், 2011

எதுவுமே தெரியாமல் வீணாக ஒரு பிரதமர் எதற்கு ?

மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2009 - இல் பதவியேற்ற நாளிலிருந்து அடுக்கடுக்காய் ஊழல் குற்றங்கள் பயமில்லாமலும் கூச்சமில்லாமலும் நடந்த வண்ணம் இருக்கிறது.
1. காமன் வெல்த் விளையாட்டு ஊழல்
2. இரண்டாம் அலைக்கற்றை ஊழல்
3. மும்பை ஆதர்ஷ் வீட்டு ஊழல்
4. பிரச்சார் பாரதி ஊழல்
5. எஸ்-பேண்ட் அலைக்கற்றை ஊழல்
6. ஐ. பி. எல். கிரிக்கெட் ஊழல்
7. மருத்துவ கவுன்சில் தலைவர் ஊழல்
8. பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில்
எம்.பி -க்களுக்கு லஞ்சம் - ஊழல்
என ஊழலின் அணிவகுப்புகள் தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி . மு.
கூட்டணி அரசின் சாதனைகளாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தேறிவருகின்றன.
இந்த ஊழல்களைப் பற்றி பாராளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளும் மற்ற எதிர் கட்சிகளும் பிரதமரிடம் கேள்வியெழுப்பினால், அதற்கு பிரதமரிடமிருந்து வரும் ஒரே பதில் " எனக்கு எதுவும் தெரியாது " என்பதுதான். எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வதற்கு வீணாக ஒரு பிரதமர் எதற்கு ?
ஒரு பிரதமருக்கு என்னதான் வேலை ? அப்படி இந்த விஷயங்களை
எல்லாம் தெரிந்துகொள்ளாமல் என்ன வேலை செய்துகொன்டிருக்கிறார் ? அல்லது இந்தியப் பிரதமர் இந்தியாவிற்கு வேலை செய்யாமல் வேறு யாருக்கு வேலை செய்கிறார் ? யாரிடம் எஜமான விசுவாசத்துடன் வேலை செய்கிறார் ? என்பது தான் நமது கேள்விகள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் யாருக்கு வேலை செய்கிறார் என்றால்.. அமெரிக்காவிற்கு எஜமான விசுவாசத்தோடு வேலை செய்கிறார் என்பது தான் துரதுஷ்ட்டமான உண்மை. இந்த நாட்டை விற்பது.. பொதுத்துறைகளை விற்பது.. பங்குகளை விற்பது.. போன்ற புரோக்கர் வேலையைத்தான் செய்கிறாரெத் தவிர, மக்களுக்களை பற்றி துளிகூட சிந்திப்பது இல்லை. நம் தேசத்தின் மீது அக்கறை இல்லாத பிரதமர்.

கருத்துகள் இல்லை: