புதன், 20 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவும் மன்மோகன் சிங்கும்..

                                                                                           courtesy: The Hindu            

                 அன்னா ஹசாரே இன்னும்  ஒரு அவதார புருஷராக - உத்தமராக தான் மக்களுக்கு காட்சியளிக்கிறார்.  இருந்தாலும் நமக்கு அவரைப்பற்றி மட்டுமல்லாமல் அவருக்கு வளைந்து போகும் பிரதமர் மன்மோகன் சிங் பற்றியும் சந்தேகங்கள் எழுகின்றன. 
             
                (1) மெகா ஊழலான 2-G ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிப்பதற்கு பாராளுமன்றக்கூட்டுக்குழுவை நியமிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் மற்ற எதிர் கட்சிகளும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்று-நான்கு மாதங்களாக போராடிய போதும் கூட்டுக்குழுவை அமைக்க ஒத்துக்கொள்ளாத பிரதமர்....
பாராளுமன்ற இரு அவைகளும் செயல்படாமல் ஸ்தம்பித்தப் போதும் கூட 
ஒத்துகொள்ளாமல் நெருக்கடியின் காரணமாக நான்கு மாதங்கள் கழித்து ஒத்துக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கி நான்கே நாட்களில் லோக்பால் மசோதாவிற்கான குழுவை நியமிக்க ஒப்புக்கொண்டது எப்படி.? என்பதில் தான் நமது சந்தேகம்.

             (2) இதற்கு முன் வாஜ்பாய் தலைமையிலான பா ஜ க - திமுக கூட்டணியாட்சியில் ராணுவவீரர்கள் அணிவதற்கு காலணி ( ஷூ ) வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றது...... அதேபோல் அதே ஆட்சியில் கார்கில் போரில் உயிரிழந்த படைவீரர்களுக்கு சவப்பெட்டி வெளிநாட்டிலிருந்து வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்..... அதே ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த திருவாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் நெருங்கிய கூட்டாளி ஜெயா ஜெட்லி அம்மையார் பாதுகாப்புத்துறைக்கு ஆயுதம் வாங்குவதற்காக கட்டுக்கட்டாக பணம் பெற்ற ஆயுதபேர ஊழல்....
இப்படியாக தேசத்தின் பாதுக்காப்பை கவனிக்க வேண்டிய பாதுகாப்புத்துறையிலேயே பா ஜ க - திமுக கூட்டணி ஆட்சியில் பலவேறு ஊழல்கள் நடந்தன. 
                ஆனால் முன்னாள் இராணுவவீரரான அன்னா ஹசாரே அப்போது எங்கே போனார் ? என்ன செய்துகொண்டிருந்தார் ? ஏன் இந்த ஊழலை ஒழிக்கும் அவதாரத்தை அப்போதே எடுக்கவில்லை ? இப்போது மட்டும் ஏன் இந்த அவதாரம் ? அதற்கு என்ன கட்டாயம் ? இது யாருடைய வற்புறுத்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் ? இவைகள் தான் நமக்கு புரியாத புதிர்களாக இருக்கின்றன.
                  அன்னா ஹசாரே பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை "தீராதபக்கங்கள் " என்ற வலைப்பதிவில் பதிவு செய்திருக்கிறார்கள்.
  --------------------------------------------------------------------------------------------------------   

அன்னா ஹசாரேவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரா?




எனது முந்தையப் பதிவுக்கு, ஹரிஹரன் என்னும் நண்பர் கடைசியாக வெளியிட்ட பின்னூட்டம் இது:

Anna Hazare has been indicted as man involved in corruption by the Justice P.B.Sawant commission of inquiry constituted way back in 2003. The report was submitted in 2005 (Not now!). The pages indicting Hazare is compiled and published in the web site

http://groups.google.com/group/alt.politics/browse_thread/thread/c3c79ff02635f005

The full report of the Commission of Inquiry by Justice P.B.Sawant is available in the site

http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY
 
but this is a paid site.
இது எவ்வளவு தூரம் உண்மை என இன்னும் முழுமையாய்த் தெரியவில்லை. ஆராயப்பட வேண்டியதும், தெளிவுற வேண்டியதும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.

நன்றி: தீராதபக்கங்கள்

கருத்துகள் இல்லை: