ஞாயிறு, 19 ஜூன், 2011

பெருமுதலாளிகளின் கொள்ளைகளுக்கு துணைப்போகும் மன்மோகன் சிங் !

            அம்பானி சகோதரர்களின் சொத்துச்சண்டையை தீர்ப்பது முதல், அவர்களது கொள்ளை லாபத்திற்கு தாராளமாக வழிவகை செய்து கொடுப்பதுவரை முழுமையாக துணை நின்றவர்கள் இந்த தேசத்தின்  பிரதமர் மன்மோகன் சிங்கும், அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும்தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

      கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி வரைவு செய்து கொடுத்துள்ள  அறிக்கை என்பது, கடலில் மூழ்கியுள்ள மிகப்பெரும் பனிமலையின் சிறு நுனி முனைப்பகுதி மட்டுமே ஆகும். இந்த ஊழலுக்கு உறுதுணையாக இருந்ததில் - இந்த மாபெரும் கொள்ளைக்கு துணைப் போனதில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மிகப்பெரிய  பொறுப்புண்டு என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.  மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை லாபம் பெறுவதற்கு  திட்டமிட்டு உயர்த்தப்பட்ட எரிவாயு விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதும்  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி மீண்டும் மீண்டும் எரிவாயு விலையை உயர்த்துவதை  கைவிட்டு, பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி முன்பு அரசிடம்  வைத்த ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டுமென்பதும்  விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட இந்த தேசத்தின் அப்பாவி மக்களின்  எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை: