சனி, 9 ஜூலை, 2011

கருணாநிதியும் மமதையும் ஒட்டிப்பிறந்தது..!

"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல'' என்று  சமீபத்தில் கொக்கரித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இது புதிதல்ல. ஆட்டைக்கடிப்பதும், மாட்டைக்கடிப்பதும் கருணாநிதிக்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். கடந்த இவரது குடும்ப ஆட்சியில் தான் குடும்ப உறுப்பினர்கள் ஆடிய ஆட்டத்தையும் கொட்டத்தையும் அடுக்கடுக்காக ஆதாரத்தோடு ஊடகங்கள் வெளியிட்டபோது திருடனுக்கு தேள் கொட்டியது போல் உள்ளுக்குள்ளேயே வெந்துகொண்டிருந்த கருணாநிதி, நேற்று மகள்.. இன்று பேரன் என ஒவ்வொருவராக விசாரணை வையத்துக்குள் வரும்போது கொதித்துப்போய் ஊடகங்களின் மீது வார்த்தைகளைக் கொட்டுகிறார். ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும் தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த காலங்களில் காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி, இன்று எம் ஜி ஆர்., ஜெயலலிதா வரை  யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சீரழியும் போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது குறளோவியத்தில் ''பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்'' என்ற குறளுக்கு என்ன பொருள் எழுதியிருக்கிறார் என்பதை படிக்கச் சொல்லுங்கள். இந்த வயசிலாவது புரிகிறதா என்று பார்ப்போம்.

1 கருத்து:

Unknown சொன்னது…

'கொல்றாங்களே ஐய்யோ கொல்றாங்களே' என்ற படமும் அப்படி ஓட்டப்பட்டதுதான்னு கலைஞர் அய்யா தன்னிலை விளக்கம் கொடுக்கிறாரோ என்னமோ
:)