திங்கள், 4 ஜூலை, 2011

அதிமுக இன்னும் தன்னுடைய அரசியல் பாதையை செழுமைப் படுத்தவேண்டும்

                   நேற்று புதுடெல்லியில் பிரதமரின் வீட்டில் லோக்பால் மசோதா சம்பந்தமாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எல்லாக்கட்சியையும் போல் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வும் கலந்துகொண்டது. கட்சியின் சார்பில் அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் திரு. தம்பிதுரை அவர்களும் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் லோக்பால் மசோதா வரையறைக்குள் பிரதமரையும் கொண்டுவரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள்  வலியுறுத்தி பேசினார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திமுக கூட ( காங்கிரஸ் மேலுள்ள எரிச்சலில் ) பிரதமரையும் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தி பெறுகிறது. ஆனால் தம்பிதுரை மட்டும் 
தன் தலைவி ஏற்கனவே பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சொன்னதையே தான் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் முன்மொழிந்திருக்கிறார். பிரதமரை இந்த லோக்பால் மசோதா வரையறைக்குள் கொண்டுவரத் தேவையில்லை என்று சொன்னது அனைவருக்கும் ஆச்சரியத்தை தான் அளித்தது.
                     இந்த மாதிரியான செயல்பாடு என்பது, வழக்கமான திமுக செயல்பாட்டுக்கு எதிரான செயல்பாடு என்று எடுத்துக்கொள்வதா அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கான அச்சாரம் என்று எடுத்துக்கொள்வதா...? என்று ஆளும் அதிமுக-வின் செயல்பாடுகளை - போக்குகளை உன்னிப்பாக கவனிக்கும் தமிழக மக்கள்  புரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: