ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எதிர்காலத்தில் மிகப்பரிய உணவு நெருக்கடி ஏற்படும்...!

                  உலகநாடுகளை சுரண்டி தான் மட்டுமே வளம்பெற்று, உலகமயம் - தாராளமயம் என்ற பெயர்களால் பல துருவ உலகத்தை, ஒரு துருவ உலகமாக மாற்றத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் காரணமாக உணவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவருகிறது. 
         எதிர்காலத்தில் மிகப்பெரிய உணவு நெருக்கடி என்பதை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அதே சமயத்தில், கீழ்கண்ட காரணங்களும் உணவு பற்றாக்குறைக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 
         (1)  மக்கள் தொகைப் பெருக்கம் -  1960இல் 3 பில்லியன் 
                                      2011இல் 7  பில்லியன்.
        (2)  மனிதர்கள் வாழும் சராசரி வயது - 1960இல் 53 வயது 
                                        2010இல் 69  வயது.
   (3) தொழிற்சாலைகள், வீட்டுமனைகள்  வளர்ச்சியால் 
                         சுருங்கி வரும் விளைநிலங்கள்.
   (4) உலகில் காடுகள் அழிப்பு மிகப் பெரிய அளவில் 
       நடைபெறுவதால் மழையளவு குறைந்து விளைச்சல் பாதிப்பு. 
   (5) கச்சா எண்ணெய் விலையேற்றம்உணவு 
       பொருட்களின் விலையை வெகுவாக பாதிக்கிறது. 
       இந்த விலையேற்றம் செயற்கையாக நிர்ணயக்கப்படுகிறது.
   (6) சொகுசு வாழ்க்கையின் காரணமாக  மோட்டார் 
       வாகன பயன்பாடு அதிகரித்து காற்று மாசுபாடு, 
       தொழில் வளர்ச்சியால்   நிலம், நீர்    மாசுபாடு 
       இதனால் சுற்றுச்சுழல் மாசடைந்து பருவநிலை மாற்றம் 
       ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை
   (7)  உணவு உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவைகள் அனைத்தும்  
       ஏகாதிபத்தியத்தின் கையில்  உள்ளதால் தேவையான  அளவு   
       உணவு  உற்பத்தி இருந்தும் பட்டினியாக மக்கள்.  
       உச்ச நீதிமன்றம் வீணாகும் தானியங்களை 
       ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்லியும் நமது 
       பிரதமர் மன்மோகன் சிங் தரமறுத்து அழிச்சாட்டியம் 
       செய்ததை நாம் நன்கு அறிவோம்.
  (8)  ஆப்பிரிக்க நாடுகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் 
       ஏகாதிபத்திய நாடுகளுக்கு குத்தகை / விற்பனை செய்யப்பட்டு 
      பயோ-டீசல் உற்பத்தி செய்யப்படுவதும்,                    
      தென்அமெரிக்காவில்  உணவு  பண்டங்களிலிருந்து எத்தினால் 
       உற்பத்தி    செய்யப்படுவதும்...
  (9) முக்கியமான விதைகள், உரம், பூச்சிகொல்லி மருந்துகள்    
      போன்றவைகள் கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள்

   (10 )  உலக வங்கி மற்றும்  பன்னாட்டு நிதி நிறுவனங்களின்  
      கேள்விகுறியாகும் நம்பகத் தன்மை.

   (11)  வளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்கு 70% மேல் மானியம் தந்து  
     அவர்களைக் காப்பாற்றி கொண்டு வருகையில்,  வளரும் நாடுகளை 
     மானியம் தர  கூடாது என வற்புறுத்தி தங்கள் நாட்டு உணவு 
     பொருட்களை குறைந்த விலையில் வளரும் நாடுகளில் விற்று 
     உள்ளூர் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது.  
     உதாரணமாக  ஹெய்தி (HAITI )  நாட்டின் நெல் விவசாயம் அமெரிக்க 
     அரிசி     இறக்குமதியில் சிக்கி நெல் விவசாயம் பாழடிக்கப்பட்டது. 
     இன்று      அரிசிக்காக அமெரிக்காவை நோக்கி இருக்கும் நிலைமை.

      (12)  விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை வணிகமாக்கி ஊகவணிகம், 
      பங்குசந்தைளில் செயற்கையாக விலையேற்றி  கொள்ளையடிக்கும் 
      ஸ்திரமற்ற பன்னாட்டு வங்கிகள் மற்றும் ஹெட்ச் பண்டுகள்.
     (13 )  எல்லாவற்றுக்கும் மேலாக  உலகமயம், தாராளமயம்  விவசாயத்தை
                வெகுவாக பாதித்துள்ளது.

        இவற்றையெல்லாம் பற்றி நன்கு அறிந்திருந்தும், நம் ஆட்சியாளர்கள்   நம்மை ஏமாற்றாமல் நம் வருங்கால குழந்தைகளை பட்டினியின்றி 
காப்பது அவர்களின் கடமையாகும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
     .
         உணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள் பற்றி தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் காலனி ஆதிக்க நாடுகள் அதிகமாக இருந்தாலும் ஆசியா கண்டத்தில் ஜப்பான் மட்டுமே இருந்தது சற்று வியப்பை அளித்தது. என்றாலும்  அது 17 வது நாடாக தான் இருக்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஒருபுறம் வீணாகும் உணவு பொருட்கள் மறுபுறம் பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் இறக்கும் அவலம். நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்கத்திய நாடுகள், தான் செய்யும் இந்த தவறை திருத்திக் கொள்ளுமா? இல்லை தொடருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதனை அந்தந்த நாட்டின் மக்கள் தொகையோடு  ஒப்பிட்டு பார்க்கையில் மனம் கனப்பது  உண்மை தான்.
     பல மைல்கள் நடந்து சென்று குடிநீர் எடுத்துவரும் ஆப்பிரிக்க பெண்மணிகள், அவர்கள் குடிநீருக்காக மட்டுமே பூமிக்கும் நிலாவிற்கும் இடையே ஆன தூரத்தை போல் பதினாறு மடங்கு நடக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. ஐ. நா சபை சொல்கிறது.
     இப்படி   வீணாக்கும் ஒவ்வொரு உணவு பொருட்களில்  மறைந்திருக்கும் நீர்” (Virtual Water) பற்றியும் கணக்கிட்டால் இன்னும் நம் நெஞ்சம் பதறும். இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறது ஆனால் ஒன்று நாம் அவைகளை கண்டுகொள்வதில்லை அல்லது அவைகளை தன் இலாபத்திற்கு ஏகாதிபத்தியம் சுரண்டிவிடுகிறது. இது  நம்     வருங்கால குழந்தைகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு அமைதியின்மையையும் ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

1 கருத்து:

Nalliah சொன்னது…

அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .
அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CR11:01 PM 24/09/2016EDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.
உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுவதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் "Democracy is when the indigent, and not the men of property, are the rulers." எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

- நல்லையா தயாபரன்