புதன், 23 நவம்பர், 2011

நரேந்திர மோடியின் மற்றுமொரு நரவேட்டை அம்பலம்....!

                             உண்மையிலேயே நரேந்திர மோடி என்றாலே இரத்த வாடை தான் அடிக்கிறது. இரத்தத்தால் தோய்த்தெடுத்த வரலாற்றை படைத்தவர் தான் இந்த நரேந்திர மோடி என்பது மூடி மறைக்கப்பட்ட அவரது நரவேட்டை சாதனைகள்  இப்போது ஒவ்வொன்றாக வெளியே வரும் போது தான் தெரிகிறது. நல்லவன் போல் முகமூடி அணிந்து உலா வந்தவன் தான் இந்த இரத்தவெறி பிடித்த மோடி என்பதை இப்போதாவது மக்கள் உணரட்டும். 
                   கடந்த 2004 ஜூன் 15 அன்று காவல்துறையுடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று பேர் காவல்துறையுடனான மோதலில் இறக்கவில்லை என்றும்  அவர்கள் நான்கு  பேரும் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும்  குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக்குழு அண்மையில் கூறியுள்ளது. அன்றைக்கு கொல்லப்பட்ட அந்த நான்கு பேரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு, முதலமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்தவர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டும் அவர்கள் மீது சுமத்தப்பட்டது. 
                இதுகுறித்து விசாரித்த அகமதாபாத் மாநகர நீதிபதி எஸ்.பி.தமங், 243 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கை ஒன்றை சென்ற செப்டம்பர் 2009  - ல்   தாக்கல் செய்தார். இது சம்பந்தமான பல்வேறு விபரங்களைக் கண்டுபிடித்து நீதிபதி தமங் அன்றே  ஆய்வறிக்கையாக தந்திருக்கிறார்.
                    காவல் துறையினர் முதலமைச்சரிடமிருந்து பாராட்டு பெறவும்,  தங்கள் பதவி உயர்வுக்காகவுமே  தான் அவர்கள் இந்த என்கவுன்ட்டர் நாடகத்தை நடத்தி நான்கு அப்பாவி இளைஞர்களை கொன்றிருக்கிறார்கள்  என்ற உண்மையையும் வெளியிட்டிருந்தார்.
                   குஜராத் காவல்துறையினர், முதலமைச்சருக்கு இரத்த அபிஷேகம் செய்து மனம் குளிர வைத்திருக்கிறார்கள்.
          ஆனால் இந்த அறிக்கையை மாநில அரசு ஏற்காமல் உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது. உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக்குழுவும் தற்போது இது என்கவுன்ட்டர் அல்ல, காவல்துறையினர் நடத்திய படுகொலைச் செயல்தான் என்றுஉறுதி செய்துள்ளது.
                       இந்த சம்பவம் மட்டுமல்லாமல், தொடர்கதையான “என்கவுன்ட்டர்கள்” நரேந்திர மோடியின் மீதான கறையைத் துடைக்கிறோம் என்று கிளம்பிய காவல்துறை அதிகாரிகளின் வேட்டை தீவிரமாக நடந்திருக்கிறது. 2003ம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இதுபோல்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். குஜராத்திற்கு வந்து நரேந்திர மோடியைக் கொல்ல வந்தார்கள் என்று அனைவரின் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இதுபோன்ற என்கவுன்ட்டர் நாடகத்தின் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
                     இப்படியான ''போலி  என்கவுன்ட்டர்களை'' எல்லாம் குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணை செய்து, இந்த சம்பவங்களுக்கெல்லாம் காரணமான முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் தண்டனை வழங்கவேண்டும். இதைத் தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களும், போது மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

yar yeppadi sollinalum oruvarudaya sarithiram avargalai nalai thirumbi parka sollum parkalam