ஞாயிறு, 15 ஜனவரி, 2012

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...!

                    நம் நாட்டு உழவையும், தொழிலையும் நாசப்படுத்த நம் நாட்டிற்குள்ளே வரும்  பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிப்போம். வருமானம் இல்லாமல் போனதால் தன் மானம் காக்க உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் வாழவைப்போம். 
 
            நம் நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் உழவும், தொழிலும் உயரவேண்டும். இந்த தேசத்தைக்காக்கும் ராணுவம் என்பது கிராமப்புறங்களிலும்,  தொழிற்சாலைகளிலும்  தான் இருக்கின்றன. அரிவாளும், சுத்தியலும் தான் இவர்களின் ஆயுதம். துப்பாக்கிகளும் பீரங்கிகளும் ஏந்திய ராணுவம் தேவையில்லை. அரிவாளும் சுத்தியலும் ஏந்திய ராணுவம் தான் நமக்குத் தேவை. அது அதான் சிறந்த ராணுவம். உழவும் தொழிலும் வளர்ந்தால் தான் அது வல்லரசு. அது தான் நல்லரசு.


                      உழுபவர்களுக்கு நிலத்தையும்,                      
                      உழைப்பவர்களுக்கு நாட்டையும் கொடுப்போம்.               
                      அப்போது தான் நாடும் உயரும். நாமும்  உயர்வோம்.               
                      பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம்...                 
                      புரட்சிகர பொங்கல் நல்வாழ்த்துகள்...                

கருத்துகள் இல்லை: