புதன், 4 ஏப்ரல், 2012

சிவந்தது கோழிக்கோடு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பதிவுகள்...!

           

           கோழிக்கோட்டில் கட்சியின் அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு ''சோஷலிசத்திற்கே எதிர்காலம்'' என்ற கண்காட்சியினை பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் சென்ற வாரம் திறந்து வைத்தார்.


                                                                                                                 

தோழர். எஸ். ராமச்சந்திரன் பிள்ளை
    மாநாட்டினையொட்டி 
    கோழிக்கோட்டில் ஆங்காங்கே 
     கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

          



  தோழர். பிருந்தா காரத்
தோழர். டி. கே. ரங்கராஜன்









                                                                                                                                   
                                                                 
மாநாட்டினையொட்டி கோழிக்கோடு பகுதிகளை சுற்றி  மாநகராட்சி மேயர் தோழர்.Prof.A K பிரேமஜம், மாவட்டச்செயலாளர் தோழர். T P ராமகிருஷ்ணன் மற்றும் கட்சியின் தலைவர்களும்,  செந்தொண்டர்களும் சேர்ந்து சுத்தம் செய்தனர்.







                                                                                                                  
                                                             
                சென்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி கய்யூர் தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாநாட்டுக்கான கொடிக்கம்பம் புறப்பட்டது.... புன்னபுரா - வயலார் தியாகிகள் நினைவிடத்திலிருந்து மாநாட்டில் ஏற்றப்பட வேண்டிய செங்கொடியை கேரள மாநில
முன்னாள் முதலமைச்சர் தோழர். வி. எஸ். அச்சுதானந்தன் எடுத்துக்கொடுக்க கொடி பயணம் புறப்பட்டது....
         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாடு துவங்குவதை பிரகடனப்படுத்தும் வகையில் கோழிக்கோடு கடற்கரையில் செவ்வாயன்று மாலை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
                 மாநாட்டுக்கொடியை பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சிமுழக்கங்களுக்கிடையே கட்சியின்கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் ஏற்றி வைத்தார். ஓஞ்சியம் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட தியாகிகள் ஜோதி உட்பட தியாக ஜோதிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. 
      மாநாட்டினையொட்டி கோழிக்கோடு தாகூர் ஹாலில் நேற்று இரவு கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் ''தியாகிகள் சுடரை'' ஏற்றிவைத்தார்.
                                                                                                                             
                                                                                  

                          
              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - வது அகில இந்திய மாநாடு எழுச்சியுடன் கோழிக்கோட்டில் துவங்கியது. நேற்று  புதனன்று காலை 9.15 மணிக்கு 20வது அகில இந்திய மாநாட்டிற்காக எழுதப்பட்ட பாடலுடன் மாநாடு துவங்கியது. இந்தியமாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 20 தோழர்கள் உலக நடப்பு துவங்கி உள்ளூர் நிகழ்வுகள் வரை நவீன, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் தாக்கத்தால் மக்கள் படும் சிரமங்களையும், அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திவரும் போராட்டங்களையும் தத்துரூபமாக நிகழ்த்திக்காட் டினர்.
           இந்த நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும். உழைப்பாளி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து செங்கொடி உயரும். அதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு  இடையில் காலை 9.45 மணிக்கு கட்சியின் மூத்ததலைவரும் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.உமாநாத் மாநாட்டு வளாகத்தில் கூடியிருந்த பிரதிநிதிகள், பார்வையாளர்கள், செந்தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுக்கிடையே கொடி ஏற்றி வைத்தார்.மாநாட்டுக்கொடியை ஏற்றியபோது 20 வது மாநாட்டின் வெற்றியை குறிக்கும் வகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட, வண்ண வண்ண பலூன்கள் வானில் மிதந்து சென்றன. 
          தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, சீத்தாராம் யெச்சூரி, மாணிக்சர்க்கார், பிருந்தா காரத், கே.வரதராசன், பிமன் பாசு, நிருபம்சென், பி.வி. ராகவலு, கொடியேறி பாலகிருஷ்ணன், பினராயி விஜயன் உள்ளிட்டவர்களும், அவர்களைத் தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினர் கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் தியாகிள் ஸ்தூபிக்கு மல ரஞ்சலிசெலுத்தினர்.
                                                                                                                           
                                                                                    

கருத்துகள் இல்லை: