சனி, 27 அக்டோபர், 2012

அமெரிக்க நாய்க்கு சிவலிங்கத்திற்கும், குட்டிச்சுவருக்கும் வித்தியாசம் தெரியாது...!

        
            வேலையின்மை, மனித உரிமை மீறல், நேர்மையற்ற நிர்வாகம், ஊழல், சொத்து சேர்ப்பு, பொருளாதார சீர்குலைவு போன்ற முடை நாற்றமெடுக்கும் பிரச்சனைகள் வளர்ந்திருக்கும் இந்தியா போன்ற அமெரிக்கவிசுவாச முதலாளித்துவ நாடுகளை விட்டுவிட்டு,  சோஷலிச மழையில் நனைந்து சமதர்மம், சமத்துவம், உணவு, உடை, வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், மனித உரிமை, நேர்மையான - தூய்மையான நிர்வாகம் என அனைத்தும் செழுமையாய் வளர்ந்து எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்கும் தேசங்களை பற்றியும், அந்த தேசத்தின் ஆட்சியாளர்களைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும்  அவதூறுகளை பரப்புவது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கைவந்த கலை.
        கியூபா, வடகொரியா, வியட்நாம், சீனா போன்ற சோஷலிச நாடுகளைப் பற்றியும், அதன்
தலைவர்களைப் பற்றியும் ஏதாவது அவதூறுகளைப் பரப்புவதே அமெரிக்காவிற்கு ஒரு தொழிலாக போய்விட்டது. ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கு - அவைகளை வாழ வைப்பதற்கு இதுபோன்ற  சித்து விளையாட்டுகளை  செய்யவேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்கா இருக்கிறது என்பது தான் மிக கேவலமான ஒன்றாக இருக்கிறது.
        அமெரிக்காவின் இப்படிப்பட்ட வழக்கமான   அவதூறு அர்ச்சனையில் தான் சமீபத்தில்
கியூபா நாட்டின் மாபெரும் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ இறந்துவிட்டதாக ஆராதனை
செய்யப்பட்டு அமெரிக்கா மூக்குடைப்பட்டது.
       இப்போது அமெரிக்கா மக்கள் சீனத்தின் உள்விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கிறது.
சீன பிரதமர் வென் ஜியாபோ குடும்பம் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்து விட்டதாம். 
''தி நியூயார்க் டைம்ஸ்’' என்ற அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டு சோஷலிச மக்கள்
சீனத்தின் மீது அமெரிக்கா சேற்றை வாரி வீச முயற்சி செய்திருக்கிறது. வென் ஜியாபோவின்
பதவிக்காலம் குறித்து தாங்கள் அந்த நாட்டில் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்திருகிறதாம்.
          வென் ஜியாபோ பிரதமராக இருக்கும் இந்த  காலகட்டத்தில், அவரும், அவர் மனைவி,
மகன், மகள், தம்பி, மைத்துனர் உள்ளிட்ட குடும்பத்தினர் பெரும் பணக்காரர்களாக ஆகிவிட்டார்களாம். அந்த குடும்பம், 2.7 பில்லியன் டாலர் (ரூ.14 ஆயிரத்து 850 கோடி) சொத்து குவித்து இருக்கிறார்களாம்.
        ''இந்த செய்தி சீனாவுக்கு எதிரான அவதூறு பிரசாரம். உள்நோக்கம் கொண்டது’' என்று கூறி இந்த  செய்தியை சீன அரசு மறுத்துள்ளது என்பது வேறு விஷயம்.
        என்னாங்கடா டேய்... முதலாளித்துவ ஆட்சியில் புரையோடி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் நேர்மையற்ற நிர்வாகம், மெகா ஊழல், சொத்து சேர்ப்பு, பொருளாதார சீர்குலைவு  போன்ற மலை போல் குவிந்திருக்கும் குப்பைகளை உலக மக்களின் பார்வைகளிலிருந்து மறைப்பதற்கு, அப்பழுக்கற்ற தெளிந்த நீரோடையில் தான் இந்த அமெரிக்க நாய் சிறுநீர் கழிக்கவேண்டுமா...? என்பது தான் நமது கேள்வி.

கருத்துகள் இல்லை: