வியாழன், 25 அக்டோபர், 2012

தந்தையின் அன்னை தேசத்தை விற்கும் சோனியா - மன்மோகன் கூட்டத்திற்கு யோக்கியதை இல்லை தான்...!


           கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தான் உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா என்ற மாணவி,  '' மகாத்மா காந்திக்கு 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை வழங்கியது யார்..?'' என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மனு ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு  அனுப்பியிருந்தார். பிரதமர் அலுவலகத்திற்கு அதற்கான சரியான பதில் தெரியாததால், அந்த மனு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் விடை தெரியாததால், பின் அந்த மனு இந்திய தேசிய ஆவண காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது.
            இதற்கு பதில் தெரிந்திருந்தால் இவனுங்க நாட்டை இப்படி கூறுபோட்டு விற்க மாட்டானுங்களே பாவிங்க...?
        கொஞ்சம் கூட அதைப்பற்றிய ஒரு ஆராய்ச்சி அறிவு கூட இல்லாமல், பல மாதங்கள் கழித்து ஒரு வழியாக உள்துறை அமைச்சகமே அந்த குழந்தைக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், "மகாத்மா காந்திக்கு அதுபோன்ற பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது என்பது தான் ஆச்சரியமானது.
        ஆனால் அந்த பெண் அத்தோடு விடவில்லை. "மகாத்மாவை தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா தனித்தனியே கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பதிலே சொல்லாமல் மத்திய அரசு மௌனமாய் இருந்தது.
         அப்போதும் அந்த பெண் விடவில்லை. தனது கோரிக்கை மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மீண்டும் ஒரு மனு அளித்தார்.          அந்த மனுவும் கடைசியில்  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சகம் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி என்னவென்றால்,
        ''மகாத்மா காந்தியை தேசத்தந்தை என குடியரசுத்தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும்
ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை அளிக்க முடியும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டு அந்தப்பள்ளி மாணவியின் ஆவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
          தேசத்தந்தையின் அன்னை தேசத்தையே கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிற சோனியா காந்தி - மன்மோகன் சிங் கூட்டத்திற்கு, இந்த தேசத்தை அந்நியர்களிடமிருந்து மீட்டுக்கொடுத்த மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்று பட்டம் சூட்டுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது...? அதனால் இப்படியொரு பதிலை பதிலை அனுப்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.   

கருத்துகள் இல்லை: