வெள்ளி, 16 நவம்பர், 2012

‘சஸ்பென்ஸ் இருந்தால்தான் படம் ஓடும்’ - சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மீதான திமுக நிலை...?

           சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் திமுகவின் நிலை என்ன என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக திமுக கூறியது. 
           நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியாவது தீர்மானம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்கும் என்று அதன் தலைவர் கருணாநிதி அறிவித்தார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து இடதுசாரிக்கட்சிகள் செப்டம்பர் 20 -ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாயன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இதுகுறித்து கேட்டதற்கு ப.சிதம்பரம், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார். சிதம்பரம் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வந்ததாக கருணாநிதி கூறினார்.
          சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அப்போது அது குறித்து திமுக முடிவெடுக்கும் என்றும் கருணாநிதி கூறினார். இந்நிலையில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் சில்லரை வர்த்தகத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக முடிவெடுக்கும் என்று கூறினார். தமிழகத்திலுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தங்களை பெருமளவு பாதிக்கும் என்று அஞ்சுகின்றனர். இது தொடர்பாக நாங்கள் விவாதித்து வர்த்தகர்களின் நலனைக் கருத்தில்கொண்டு முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
           நான் 100 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். சஸ்பென்ஸ் இருந்தால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். சில்லரை வர்த்தகத்தை எதிர்த்து வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானத்தை இடதுசாரிக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தால் அதை திமுக ஆதரிக்குமா என்று கேட்டதற்கு, கட்சியின் நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தமது கட்சி அதை ஆதரிக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அரசின் முடிவை நிராகரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புடன் கூடிய தீர்மானம் கொண்டுவர இடதுசாரிக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் யாராவது தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்று கூறிய திமுக தலைவர், தற்போது ஆலோசித்து உரிய முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.
 நன்றி :


courtesy : The Hindu

கருத்துகள் இல்லை: