ஞாயிறு, 18 நவம்பர், 2012

இரத்தவெறி பிடித்து அலையும் இஸ்ரேல் - ஐ. நா. சபை என்ன புடுங்கிகிட்டா இருக்கு...?









       
         கடந்த ஐந்து நாட்களாக இஸ்ரேல் திடீரென பாலஸ்தீன நாட்டின் காசா நகரின் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ஐந்தாவது நாளாக இன்றைக்கு கூட பாலஸ்தீனத்தின் பிரதமர் அலுவலகத்தையும், ஊடகங்களின் தலைமை அலுவலகத்தையும் ஏவுகணை மூலம் தகர்த்து நிர்மூலமாக்கியது. இந்த ஏவுகணை தாக்குதல்களில் இதுவரை பல குழந்தைகள் உட்பட 50 - க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதே போல் 500 - க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிலும் பல குழந்தைகள் அடங்குவர்.
            ஐந்து நாட்களாக இந்த படுகொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. உலக நாடுகள் அனைத்தும் கொஞ்சம் கூட பதறாமல் பாராமுகமாய் இருக்கின்றன. ஒபாமாவின் வெற்றியை கொண்டாடும் ஏகாதிபத்திய - முதலாளித்துவ ஆதரவுபெற்ற சர்வதேச ஊடகங்களும், பால்தாக்கரேவின் மரணத்திற்கு ஒப்பாரி வைக்கும் பாசிச குணம் படைத்த இந்திய ஊடகங்களும் ஒரு முறை கூட இஸ்ரேலின் இந்த கொடூரச் செயலை கண்டித்து வாயை திறக்கவில்லை. உலக போலிசாக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்கா  தன் செல்லக்குழந்தையின் இந்த செயலை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது. சுதந்திர மூச்சுக்காற்றை சுவாசிக்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கும் அமைதியான ஒரு நாட்டின் மீது இரத்தவெறி பிடித்த இன்னொரு  நாடு தாக்குதல் நடத்திகிறது. ஆனால் ஐ.நா சபை அதை தட்டிக்கேட்காமல் என்ன புடுங்கிகிட்டு இருக்கிறது என்று தெரியவில்லை.  

கருத்துகள் இல்லை: