சனி, 5 ஜனவரி, 2013

மரணத்தை வென்ற பாகிஸ்தான் பெண் கல்வி வீராங்கனை மலாலா...!




        














          பெண் கல்வி உரிமையை பாகிஸ்தான் மண்ணில் விதைத்ததற்காக, பிற்போக்கு மதவெறிக் கூட்டமான தாலிபான்களால் சுடப்பட்ட பெண் கல்வி உரிமை வீராங்கனை மலாலா லண்டனில்  மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.  இவரது அஞ்சாத நெஞ்சமும், உறுதியான மனமும் தான் இவரை மரணத்திலிருந்து காப்பாற்றியது.
            குணமடைந்த மலாலா மரணத்திலிருந்து மீண்டதும் ஒரு மூலையில் ஒடுங்கிவிடாமல், ''பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் பெண் கல்வியை உயர்த்திப் பிடிப்பேன்'' என்று சொன்னது என்பது எவருக்கும் அஞ்சாத  இவரது துணிச்சலை தான் காட்டுகிறது.
             பெண் கல்வியை சத்தமில்லாமல் பரப்பிவரும் இந்த வீர சிறுமியை பாராட்டி, பாகிஸ்தான் அரசு மலாலா பெயரில் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கில் இயங்கிவரும் ஒரு மகளிர் கல்லூரிக்கு மலாலாவின் பெயரை பாகிஸ்தான் அரசு சூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                      

கருத்துகள் இல்லை: