ஞாயிறு, 3 நவம்பர், 2013

பி.ஜே.பி.-யின் மீது விசுவாசத்தைக்காட்டும் லதா மங்கேஷ்கர்...!

           

             சென்ற வெள்ளிக்கிழமை அன்று புனேவில் இந்தி திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கர் தனது தந்தையார் தினநாத் மங்கேஷ்கரின் நினைவாகக் கட்டியுள்ள ''சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை'' ஒன்றின் துவக்க விழாவிற்கு ''பிரதமர் கனவு வேட்பாளர்'' நரேந்திரமோடியையும் அழைத்திருந்தார். தனது ''பிரதமர் கனவு'' பிரச்சாரக்கூட்டத்தை 200 கோடி ரூபாய் அளவிற்கு  செலவு செய்து ஏற்பாடுகளை செய்யும் நரேந்திரமோடி இலவசமாய் கிடைத்த இந்த ''பிரச்சார மேடையையும்'' விட்டுவைக்கவில்லை. பிரபலங்களோடு தன்னை இணைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவங்ககிட்ட இருக்கும் ஒரு பத்து ஓட்டையாவது தனக்கு சாதகமாக மாற்ற முடியாதா என்ற  ஏக்கத்தில் மோடி கலந்து கொண்டார். கலந்துகொண்டது மட்டுமல்லாமல், தான் சொன்னபடி லதா மங்கேஷ்கரை சிந்தாமல், சிதறாமல், குறையில்லாமல் பேசவும் வைத்தார்.
            நரேந்திரமோடியை மேடையில் வைத்துக்கொண்டு லதா மங்கேஷ்கர் நரேந்திரமோடி சொல்லிக்கொடுத்தது போல் “நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனது சகோதரரைப் போலத் திகழ்கிறார். இந்தியாவின் பிரதம மந்திரியாக நரேந்திரமோடி தான் வரவேண்டும் என்று எனது இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இதுதான் ஒவ்வொருவரின் விருப்பமும் கூட....!”  என்று மெய்சிலிர்க்க பேசி, 2001 - ஆம் ஆண்டு தனக்கு ''பாரத் ரத்னா'' பட்டம் அளித்து கவுரவப்படுத்திய பாரதீய ஜனதாக் கட்சிக்கு தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார்  என்பதை தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே! அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என கவுண்டர் குரலில் கவுண்டர் கொடுக்கணம் போல!

Thamil சொன்னது…

Good one

Unknown சொன்னது…

என்ன ஒரு வயிதெரிச்சல்?
:)