வெள்ளி, 17 ஜனவரி, 2014

தவறான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் ஆட்சி ஏற்பட வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா

.
                                                                                                                                                       
           மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் 97-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தனது கட்சியினருக்கு தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார். 

             ''மாநிலங்கள் வலுப்பெற்றிருந்தால் மட்டுமே இந்தியக் குடியரசு வலுப்பெற்றிருக்க முடியும். இதற்குத் தேவை மத்தியில் ஆட்சி மாற்றம். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மைபயக்கக்கூடிய ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்படவேண்டும். 20 ஆண்டுகளாக நிலவிவரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும்.                                                                                      
                தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும்.                    
               தமிழகத்தை வளப்படுத்த, பாரதத்தை வலிமைப்படுத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக்கனியைப் பெறும் வகையில் களப்பணி ஆற்றிடவேண்டும்.''                                  

கருத்துகள் இல்லை: