ஞாயிறு, 9 மார்ச், 2014

மோடிக்கும் பாஜகவிற்கும் வாக்களிக்காதீர்கள்...! - புகழ் பெற்ற பிரமுகர்கள் அறிக்கை.

                    ''வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியையும்,  அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்'' என வாக்காளர்களைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
              ''இடதுசாரிகளும் வகுப்புவாதத்துக்கு எதிரான சக்திகளும் ஆம் ஆத்மி  கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யக்கூடாது'' எனவும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பா.ஜ.க. அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்ய வேறு ஆற்றல்மிகு வேட்பாளர் இல்லாத போது மட்டுமே மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
                நரேந்திர மோடியின் அரசியல் பாசிச அரசியல் ஆகும். எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும்கூட மோடி ஆட்சிக்கு வந்தால் பாதிப்படையும். பாரதீய ஜனதாக் கட்சிக்கு  எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்காத வரை நரேந்திர மோடியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை அடைய காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் தேர்தல் களத்தில் ஓரணியில் திரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள பிரமுகர்கள் வருமாறு :
அனில் பாடியா (இதழியலாளர்),

அன்ஜும் ராஜாபாலி (திரைக்கதை ஆசிரியர், ஆசிரியர்),

அருணா புர்டே (பெண்ணிய செயற்பாட்டாளர்),

ஹஸீனா கான் (முஸ்லீம் பெண்களின் உரிமைகள் இயக்கம்),

இர்ஃபான் இன்ஜினியர் (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஜாவித் மலிக் (பல்கலைக் கழக விரிவுரையாளர்),

காமயானி பாலி மஹாபல் (பெண்ணிய, மனிதஉரிமை ஆர்வலர்),

கண்ணன் சிறீநிவாசன் (பத்திரிகையாளர், ஆய்வாளர்),

மங்ளூரா விஜய் (எழுத்தாளர், சமூக ஆர்வலர்),

மனோகர் இளவர்தி (பிரஜா ராஜகிய வேதிகே),

எம்.கே. பிரசாத் (கேரள சாஸ்திர ஸாஹித்திய பரிஷத்)

பிரதீப் எஸ்டிவ்ஸ் (ஆய்வாளர், ஆலோசகர்),

ராம்தாஸ் ராவ் (பி.யூ.சி.எல் - பெங்களூர்),

ராம் புன்யானி (அகில இந்திய மதச்சார்பற்ற ஃபோரம்),

ஆர். கிறிஸ்டோபர் ராஜ்குமார் (நேஷனல் கவுன்சில் ஆஃப் சர்ச்சஸ் இன் இண்டியா),

ரிபக்கா குரியன் (வகுப்புவாத எதிர்ப்பாளர்),

ரோஹினி ஹென்ஸ்மேன் (அறிஞர், எழுத்தாளர்),

ஷேக் உபைத் (மனித உரிமை ஆர்வலர்),

எஸ். ஜனகராஜன் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்),

சுபாஷ் கடதே (நியூ சோசியலிஸ்ட் இனிஷியேட்டிவ்),

சுமி கிருஷ்ணா (பெண்ணியவாதி, எழுத்தாளர்),

உத்ய சந்திரா (அரசியல் ஆய்வாளர்),

உமா வி. சந்துரு (பி.யூ.சி.எல் - பெங்களூரு),

ஜஹீர் அஹ்மத் சயீத் (நரம்பியல் மருத்துவர்).

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

எத்தனை பேர் கையெழுத்து போட்டார்களோ அதனை வோட்டுதான் பாதிக்கப்படும் -- அதுவும் அவர்கள் ஓட்டுப் போட்டால் (நெறைய "அறிவு ஜீவிகள்" ஒட்டு போடுவதே இல்லை )