வெள்ளி, 24 அக்டோபர், 2014

இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு அஞ்சலி...!


                   சென்ற தலைமுறையின் பழம்பெரும் நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ஆகிய முப்பெரும் மூன்றெழுத்து நடிகர்களில் இலட்சியநடிகர் என்று தமிழக மக்களால் சிறப்புடன் அழைக்கப்படும் எஸ்.எஸ்.ஆர் இன்று காலமானார். அன்றைய தலைமுறையின் எல்லா முன்னணி கலைஞர்களும் மறைந்துவிட்ட சூழ்நிலையில், இன்றுவரை    இன்றைய தலைமுறை இளைய கலைஞர்களுக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து கொண்டிருந்த இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் தமிழ் திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு.
               இவர் தன்னுடைய கடைசி திரைப்படம் வரை பிற மொழி கலப்பில்லாத தமிழில் மட்டுமே முழுமையாக வசனம் பேசியவர் என்பது மட்டுமல்லாமல், தன்  வாழ்நாளில் வரலாற்று மற்றும் சமூக திரைப்படங்களில் நடித்திருக்கிறாரே தவிர புராண - இதிகாச திரைப்படங்களில் இவர் இறுதிவரையில் நடிக்காமல் தான் ஒரு இலட்சியநடிகனாகவும், ஒரு பகுத்தறிவாளனாகவும் வாழ்ந்துகாட்டினார். 
              இந்தியாவிலேயே நடிப்புத்துறையிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் இவர் தான். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். இலட்சியநடிகராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும்   மக்களிடம் நன்கு அறிமுகமான இவரால் தமிழகத்தின் முதலமைச்சர் என்ற அளவிற்கு உயர்வதற்கு இவருக்கு அரசியல் சூச்சமம் தெரிவில்லை என்பது தான் உண்மை.
              மறைந்த இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி....!    

கருத்துகள் இல்லை: